விஜய் அவர்களின் இரண்டாவது படம் செந்தூரப்பாண்டி. இந்த படத்தை இயக்கியவர் அவரது தந்தை S.A.சந்திரசேகர். திரைப்படம் வெளியான வருடம் 1993. கதாநாயகியாக நடித்தவர் யுவராணி, இசை தேவா, கேமரா ரவிசங்கர் மற்றும் எடிட்டிங் கெளதம்ராஜ்.
இந்த திரைபடத்தில் விஜய்க்கு இளைய நட்சத்திரம்
என்று பெயர் சூட்டினார். படத்தில் ஒரு முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்தவர் திரு விஜயகாந்த் அவர்கள். ஆம் செந்துரபாண்டி படத்தில்
செந்துரபாண்டி என்பது விஜயகாந்த் அவர்களின் பெயர். திரு SAC அவர்கள், விஜயின் முதல்
திரைப்படம் தோல்வி என்பதால் இந்த படத்தை மிகவும் கவனமாகவும் அதே சமயம் விஜய்க்கு
ஒரு பெயர் சொல்லும் படமாகவும் இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதனால்
கதை எழுதிய பிறகு விஜயகாந்த் அவர்களை சந்தித்து நீங்கள் இந்த படத்தில்
நடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விஜயகாந்த் அவர்களும் எந்தவித தயக்கமும்
இன்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்தார். இத்திரைபடத்தை ஒரு வெற்றி படமாக ஆக்கியவர் திரு விஜயகாந்த் அவர்கள் என்று சொன்னால்
அது மிகையாகாது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த திரைபடத்தில் விஜயின் தந்தை SAC அவர்களும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.
கதை: விஜய் தனது கல்லுரி படிப்பை முடித்து
சொந்த ஊர்க்கு வருவார். அங்கு யுவராணியை பார்த்து காதல் கொள்வர். இருவரும்
காதலிக்கும் பொழுது கதாநாயகின் அண்ணன் ஆனா பொன்னம்பலம் காதலுக்கு எதிர்ப்பு
தெரிவிப்பார். அந்த சமயத்தில் ஜெயிலில் இருந்து வெளிவரும் கதாநாயகனின் அண்ணன் (விஜயகாந்த்).
பின்பு விஜய் மற்றும் யுவராணி அவர்களின் காதலில் இணைதார்களா விஜயகாந்த் எதற்காகக்
ஜெயிலுக்கு சென்றார் போன்ற கேள்விகளுக்கு விடையாக திரைப்படம் முடியும். முதல்
பகுதியில் விஜய் மற்றும் யுவராணி காதல் காட்சிகள் அருமை என்றால், இரண்டாம்பகுதியில்
வரும் விஜயகாந்த் மற்றும் கௌதமின் காதல் காட்சிகள் இன்னும் அருமையாக கையாளபட்டிருக்கும்.
![]() |
விஜயகாந்திற்கு நன்றி தெரிவிக்கும் SAC.
|
![]() |
விஜய் அறிமுக காட்சி
|
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment