அனைவரும் நினைப்பது போல் அவரது தந்தையின் கட்டாயத்தில் நடிக்கவரவில்லை. உண்மையில் விஜய் அவர்கள் அவரது தந்தையிடம் போராடித்தான் திரை பிரவேசம் செய்தார். விஜய் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு அவருக்கு திரைப்படத்துறையில் ஈர்ப்பு இருந்தது. இதையே நண்பன் திரைப்படத்தில் ஒரு வசனம் பேசி இருப்பார், அது "வெற்றிக்கு பின்னாடி போகாத உனக்கு பிடித்த துறையை தேர்ந்து எடு அதில உன் திறமையை வளத்துக்கோ கடுமையா உழைச்சிக்கிட்டே இரு வெற்றி ஆட்டோமேட்டிக் உன் பின்னாடியே வரும்னு சுவாமிஜியே சொல்லியிருக்கார்" அதுபோல தான் தனக்கு பிடித்தமான துறையை தேர்ந்து எடுத்து அதில் திறமையை வளர்த்துக்கொண்டார்.
விஜய் அவர்கள் முதன்முதலாய் ஹீரோவாக நடித்த திரைப்படம் நாளைய தீர்ப்பு, அந்த திரைப்படம் வந்த பொழுது அவரது புகைப்படத்தை போட்டு இந்த முகத்தை காசு கொடுத்து திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுமா என்று ஒரு பிரபலமான நாளிதழ் வெளியிட்டது. ஆனால், இன்று அதே நாளிதழ் விஜய் அவர்களின் புகைப்படத்தை தனது நாளிதழின் அட்டை படமாக வெளியிட ஆசை படுகிறது. காரணம் அவருக்கு பிடித்தமான துறையை அவர் தேர்ந்து எடுத்து அதில் விடாமுயற்சி உடன் உழைத்து வெற்றியும் பெற்றுள்ளார்.
முதன்முதலாக அவர் தன் தந்தையிடம் தான் திரைப்படத்தில் நடிக்க ஆசை படுவதாக கூறிய பொழுது திரு SAC அவர்கள் அதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அவர் திரைத்துறையில் பல கஷ்டகளை அனுபவித்துத்தான் இந்த இடத்திற்கு வந்தார் அதுபோல தனது மகன் கஷ்டப்படக்கூடாது என ஆசைப்பட்டார். அதனாலேயே விஜய் திரைத்துறையில் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் விஜய் அவர்கள் தனக்கு திரைத்துறை சரிவரும் அதில் நான் வெற்றியும் பெறுவேன் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து இருந்தார்.
தனது தந்தையை தன் வழிக்கு கொண்டுவர விஜய் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார் அதை உடனே செயல்படுத்தவும் செய்தார். தனது ரூமில் நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். கடிதத்தை பார்த்த திருமதி ஷோபா அவர்கள் விஜய் வீட்டை விட்டு ஓடி விட்டதாக SACயிடம் தெரிவித்தார் அந்த நேரத்தில் அவர் ஒரு திரைப்படம் சம்பந்தமான கலந்துரையாடலில் இருந்தார். பிறகு அவரை தேடினர், விஜய் அவர்கள் எங்கு போவது என்று தெரியாமல் அசோக்நகரில் உள்ள உதயம் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டுருந்தார். ஒருவழியாக அவரை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அன்று SAC அவர்கள் சரி உனக்கு சினிமாவில் என்ன தெரியும் என்று கேட்டார் அதற்கு விஜய் அண்ணாமலை திரைப்படத்தில் வரும் ஒரு வசனத்தை ரஜினிகாந்த போலவே நடித்து காட்டினார் பிறகு தன SAC அவர்கள் சரி உன்னை திரைத்துறையில் நான் அறிமுகம் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். இங்கு நான் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன் இதே போன்று மிகப்பெரிய இயர்க்குநர்கள் ஆன பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் தனது மகன்களை ஹீரோவாக அறிமுகம் செய்தனர் அனால் அவர்கள் யாரும் விஜய் அவர்களின் அளவுக்கு வரவில்லை காரணம் விஜய் அவர்கள் நண்பன் படத்தில் கூறிய வசனமே பதில்.
No comments:
Post a Comment