Sunday, 17 September 2017

ராஜாவின் பார்வையிலே - Rajavin Parvaiyile


விஜயின் ஐந்தாவது திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. படம் வெளிவந்த ஆண்டு 1995. இயக்கியவர் ஜானகி சௌந்தர், கதாநாயகியாக நடித்தவர் இந்த்ரஜாஇசை இளையராஜாகேமரா லோகநாதன் பிரசாத் மற்றும் எடிட்டிங் M.N.ராஜா.

விஜயுடன் இணைந்து அஜித் அவர்கள் நடித்தது இந்தபடத்தில் தான். வடிவேலுவின் காமெடி சிறப்பாக இருந்தது. இதில்தான் வடிவேல் அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவனாக நடித்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது.

கதை: விஜய் ஒரு ஏழை வீட்டு பையன், அவருடைய எண்ணம் என்னவென்றால் நன்குபடித்து நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என்பது. தனது கல்லுரி படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அதே ஊரில் இருக்கும் பண்ணையார் வீட்டுக்கு வரும் இந்த்ரஜா, விஜய் மீது காதல் கொள்கிறார். ஆனால் விஜய் அவரது காதலை நிராகரித்து விடுகிறார். ஒரு நாள் உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை எனக்கு தெரியவேண்டும் என்கிறார். அதன்பின் விஜய் தனது கல்லூரி வாழ்க்கையில், அவரது நண்பனின் காதலி அவரை ஏமாற்றியதை நினைவுகூருக்கிறார். அதன்பின் அவர் இந்த்ரஜா காதலை ஏற்றுகொண்டரா இல்லையா என்பதுதான் முடிவு.


விஜயும் அஜித்தும் ஒரு காட்சியில்


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

1. ஒரு சுடர் இரு சுடர் 

2. அம்மன் கோயில் 

3. கொட்டுங்க கொட்டுங்க 

4. அம்மனுக்கே 

5. இவள் யாரோ 

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

தேவா - Deva


விஜயின் நான்காவது திரைப்படம் தேவா. படம் வெளிவந்த ஆண்டு 1995. கதாநாயகியாக நடித்தவர் சுவாதி, இசை தேவா, கேமரா R.செல்வா மற்றும் எடிட்டிங் கெளதம்ராஜ்.

இந்த படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் சிவக்குமார் அவர்கள் நடித்தார். படத்தில் 3 பாடல்கள் விஜய் பாடினார், அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


கதை: ஒரு ஊரில் பெரியமனிதன் என்ற பெயரில் இருக்கும் கயவர்களிடம் இருந்து அந்த ஊர் எப்படி மீட்கபடுகிறது என்பதுதான். கல்லுரி படிப்பை முடித்து சொந்த ஊருக்கு வரும் விஜய் அங்கு சுவாதியை பார்த்து காதல் கொள்கிறார். பின்பு சுவாதியும் காதலிக்க ஆரம்பித்தபின் அவர்களின் காதலுக்கு சுவாதியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். காரணம் அந்த ஊரில் இருக்கும் பெரியமனிதனின் தம்பி தான் விஜய். கெடுதல் மட்டும் செய்யும் ஒருவனின் தம்பிக்கு தன் மகளை தரமறுக்கிறார். இறுதியில் விஜயும் சுவாதியும் ஒன்று சேர்ந்தார்களா, வில்லன் என்ன ஆனான் என்பது படத்தின் முடிவு. 

விஜயின் அறிமுக காட்சி














பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

1. அய்யயோ அலமேலு  

2. சின்ன பையன் 

3. இன்னொரு காந்தி 

4. கோத்தகிரி குப்பம்மா 

5. ஒரு கடிதம் (ஆண்)

6. ஒரு கடிதம் (பெண்)

7. சொல்லுங்கோ 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

ரசிகன் - Rasigan


விஜயின் முன்றாவது திரைப்படம் ரசிகன். படம் வெளிவந்த ஆண்டு 1994. கதாநாயகியாக நடித்தவர் சங்கவி, இசை தேவா, கேமரா ரவிசங்கர் மற்றும் எடிட்டிங் கெளதம்ராஜ்.

விஜய் அவர்களின் முதல் முன்று படங்களிலும் அவரது பெயர் விஜய் தான். இந்ததிரைபடத்தில் தான் முதல்முதலில் இளையதளபதி என்ற பட்டம் விஜயின் பெயர்க்கு முன்னால் போடப்பட்டது. படத்தில் சங்கவி அவர்கள் கொஞ்சம் கவர்ச்சி ஆக நடித்திருப்பர். இத்திரைப்படம் ஒரு வெற்றி படம். இந்தப்படம் வந்தபொழுது அதிகம் விமர்சிக்கபட்டது என்ன என்றால் அது படத்தில் வரும் ஹீரோ ஹீரோயினுக்கு சோப்பு போடும் காட்சிதான். இத்திரைப்படத்தில் தான் விஜய் அவர்கள் முதல்முதலில் பாடல் பாடினார். அது “பம்பாய் சிட்டி” என்று தொடங்கும் பாடல். பாடலின் இடையில் இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற வசனம் வரும்.

கதை: விஜய் வீட்டு மாடியில் வாடகைக்குக் குடி இருப்பார் சங்கவி. முதலில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டாலும் பின்பு காதலிக்க ஆரம்பித்து விடுவர். சங்கவின் தந்தை ஒரு காவல் துறை அதிகாரியாக இருப்பார், அவருக்கு இவர்களின் காதல் தெரிந்தவுடன் சென்னைக்கு தன்னை மாற்றிக்கொண்டு குடும்பத்துடன் சென்றுவிடுவார். பின் விஜய் சங்கவியை தேடி சென்னை செல்லும் இடத்தில ஒரு கொலை நடந்துவிடும் அதை விஜய்தான் செய்தார் என்று கொலைபழி விஜய் மீது விழுந்துவிடும். கொலைபழியில் இருந்து விஜய் எப்படி தப்புகிறார், கொலையை யார் செய்தது மற்றம் விஜயும் சங்கவியும் இனைதணர என்பது முடிவு.

இளையதளபதி என்ற பட்டம் வரும் காட்சி

விஜய் பாடிய பாடலின் இடையில் இந்தப் பாடலை பாடியவர்
உங்கள் விஜய் என்ற வசனம் வரும் காட்சி.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

1. சில்லென சில்லென  

2. ஆட்டோ ராணி 

3. பீச்சோரம் 

4. லவ் லவ் மாமா 

5. பாம்பே சிட்டி 

6. தம்பி கொஞ்சம் 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


செந்தூரப்பாண்டி - Sendhoorapandi


 விஜய் அவர்களின் இரண்டாவது படம் செந்தூரப்பாண்டி. இந்த படத்தை இயக்கியவர் அவரது தந்தை S.A.சந்திரசேகர். திரைப்படம் வெளியான வருடம் 1993. கதாநாயகியாக நடித்தவர் யுவராணி, இசை தேவா, கேமரா ரவிசங்கர் மற்றும் எடிட்டிங் கெளதம்ராஜ்.

இந்த திரைபடத்தில் விஜய்க்கு இளைய நட்சத்திரம் என்று பெயர் சூட்டினார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் திரு விஜயகாந்த் அவர்கள். ஆம் செந்துரபாண்டி படத்தில் செந்துரபாண்டி என்பது விஜயகாந்த் அவர்களின் பெயர். திரு SAC அவர்கள், விஜயின் முதல் திரைப்படம் தோல்வி என்பதால் இந்த படத்தை மிகவும் கவனமாகவும் அதே சமயம் விஜய்க்கு ஒரு பெயர் சொல்லும் படமாகவும் இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் கதை எழுதிய பிறகு விஜயகாந்த் அவர்களை சந்தித்து நீங்கள் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விஜயகாந்த் அவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்தார். இத்திரைபடத்தை ஒரு வெற்றி படமாக ஆக்கியவர் திரு விஜயகாந்த் அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த திரைபடத்தில் விஜயின் தந்தை SAC அவர்களும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.

கதை: விஜய் தனது கல்லுரி படிப்பை முடித்து சொந்த ஊர்க்கு வருவார். அங்கு யுவராணியை பார்த்து காதல் கொள்வர். இருவரும் காதலிக்கும் பொழுது கதாநாயகின் அண்ணன் ஆனா பொன்னம்பலம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். அந்த சமயத்தில் ஜெயிலில் இருந்து வெளிவரும் கதாநாயகனின் அண்ணன் (விஜயகாந்த்). பின்பு விஜய் மற்றும் யுவராணி அவர்களின் காதலில் இணைதார்களா விஜயகாந்த் எதற்காகக் ஜெயிலுக்கு சென்றார் போன்ற கேள்விகளுக்கு விடையாக திரைப்படம் முடியும். முதல் பகுதியில் விஜய் மற்றும் யுவராணி காதல் காட்சிகள் அருமை என்றால், இரண்டாம்பகுதியில் வரும் விஜயகாந்த் மற்றும் கௌதமின் காதல் காட்சிகள் இன்னும் அருமையாக கையாளபட்டிருக்கும்.

விஜயகாந்திற்கு நன்றி தெரிவிக்கும் SAC.

விஜய் அறிமுக காட்சி


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 






Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Friday, 15 September 2017

நாளைய தீர்ப்பு - Naalaiya Theerpu


திரு SAC அவர்கள் எந்த எண்ணத்தில் இந்த திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயர் வைத்தார் என்று தெரியவில்லை. உண்மையில் விஜயின் எதிர்காலம் தெரிந்தே இந்த பெயர் வைத்தார் என்றே தெரிகிறது.

நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளிவந்த ஆண்டு 4 டிசம்பர் 1992இந்த படத்தில் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆகும் பொழுது அவருக்கு வயது 18 தான். திரைபடத்தில் விஜய் அவர்களின் பெயர் விஜய் தான். இந்த படத்தில் இவருக்கு ஜோடி ஆக நடித்தவர்கள் கீர்த்தனா மற்றும் ஈஸ்வரிராவ். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிகவேல் ராதாரவி நடித்திருந்தார். இயக்கியவர் S.A.சந்திரசேகர், இசை புதுமுகம் மணிமேகலை, கேமரா R.P.இமயவரம்பன் மற்றும் எடிட்டிங் கெளதம்ராஜ். படம் வெளிவந்த பிறகு அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதில் விஜய் அவர்களை கிண்டல் செய்து வந்தவைகள் அதிகம். இது வணிகரீதியில் ஒரு தோல்விப்படம்.

சந்திரசேகர் விஜய் அறிமுகம் செய்து வெளியடும் செய்தி 





      விஜய் அறிமுகம்














பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

விஜய் ஒரு விடாமுயற்சி

அனைவரும் நினைப்பது போல் அவரது தந்தையின் கட்டாயத்தில் நடிக்கவரவில்லை. உண்மையில் விஜய் அவர்கள் அவரது தந்தையிடம் போராடித்தான் திரை பிரவேசம் செய்தார். விஜய் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு அவருக்கு திரைப்படத்துறையில் ஈர்ப்பு இருந்தது. இதையே நண்பன் திரைப்படத்தில் ஒரு வசனம் பேசி இருப்பார், அது "வெற்றிக்கு பின்னாடி போகாத உனக்கு பிடித்த துறையை தேர்ந்து எடு அதில உன் திறமையை வளத்துக்கோ கடுமையா உழைச்சிக்கிட்டே இரு வெற்றி ஆட்டோமேட்டிக் உன் பின்னாடியே வரும்னு சுவாமிஜியே சொல்லியிருக்கார்" அதுபோல தான் தனக்கு பிடித்தமான துறையை தேர்ந்து எடுத்து அதில் திறமையை வளர்த்துக்கொண்டார்.

விஜய் அவர்கள் முதன்முதலாய் ஹீரோவாக நடித்த திரைப்படம் நாளைய தீர்ப்பு, அந்த திரைப்படம் வந்த பொழுது அவரது புகைப்படத்தை போட்டு இந்த முகத்தை காசு கொடுத்து திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுமா என்று ஒரு பிரபலமான நாளிதழ் வெளியிட்டது. ஆனால், இன்று அதே நாளிதழ் விஜய் அவர்களின் புகைப்படத்தை தனது நாளிதழின் அட்டை படமாக வெளியிட ஆசை படுகிறது. காரணம் அவருக்கு பிடித்தமான துறையை அவர் தேர்ந்து எடுத்து அதில் விடாமுயற்சி உடன் உழைத்து வெற்றியும் பெற்றுள்ளார். 

முதன்முதலாக அவர் தன் தந்தையிடம் தான் திரைப்படத்தில் நடிக்க ஆசை படுவதாக கூறிய பொழுது திரு SAC அவர்கள் அதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அவர் திரைத்துறையில் பல கஷ்டகளை அனுபவித்துத்தான் இந்த இடத்திற்கு வந்தார் அதுபோல தனது மகன் கஷ்டப்படக்கூடாது என ஆசைப்பட்டார். அதனாலேயே விஜய் திரைத்துறையில் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் விஜய் அவர்கள் தனக்கு திரைத்துறை சரிவரும் அதில் நான் வெற்றியும் பெறுவேன் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து இருந்தார்.

தனது தந்தையை தன் வழிக்கு கொண்டுவர விஜய் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார் அதை உடனே செயல்படுத்தவும் செய்தார். தனது ரூமில் நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். கடிதத்தை பார்த்த திருமதி ஷோபா அவர்கள் விஜய் வீட்டை விட்டு ஓடி விட்டதாக SACயிடம் தெரிவித்தார் அந்த நேரத்தில் அவர் ஒரு திரைப்படம் சம்பந்தமான கலந்துரையாடலில் இருந்தார். பிறகு அவரை தேடினர், விஜய் அவர்கள் எங்கு போவது என்று தெரியாமல் அசோக்நகரில் உள்ள உதயம் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டுருந்தார். ஒருவழியாக அவரை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அன்று SAC அவர்கள்  சரி உனக்கு சினிமாவில் என்ன தெரியும் என்று கேட்டார் அதற்கு விஜய் அண்ணாமலை திரைப்படத்தில் வரும் ஒரு வசனத்தை ரஜினிகாந்த போலவே நடித்து காட்டினார் பிறகு தன SAC அவர்கள் சரி உன்னை திரைத்துறையில் நான் அறிமுகம் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். இங்கு நான் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன் இதே போன்று மிகப்பெரிய இயர்க்குநர்கள் ஆன பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் தனது மகன்களை ஹீரோவாக அறிமுகம் செய்தனர் அனால் அவர்கள் யாரும் விஜய் அவர்களின் அளவுக்கு வரவில்லை காரணம் விஜய் அவர்கள் நண்பன் படத்தில் கூறிய வசனமே பதில்.

Thursday, 14 September 2017

இது எங்கள் நீதி



விஜய் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக கடைசியாக நடித்த திரைப்படம் இது எங்கள் நீதிஇந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1988. இந்த படத்தின் ஹீரோவாக நடித்தவர் ராம்கி அவர்கள்இந்த திரைப்படத்தில் ராதிகாவுடன் ஒரு பாடலில் நடனம் ஆடினார்.

ராதிகாவுடன் விஜய் 

சட்டம் ஒரு விளையாட்டு


விஜய் அவர்கள் அடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம்
சட்டம் ஒரு விளையாட்டு. இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1987. இந்த படத்திலும் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த் அவர்கள். விஜயகாந்திற்காக விஜய் அவர்கள் குழந்தை வேடத்தில் நடித்த 4 வது திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் ஒரு பாடலில் நடன அசைவுகள் செய்துருப்பார்.

விஜய் நடனம் ஆடும் காட்சி

இந்த பாடலை பார்க்க,


வசந்த ராகம்


விஜய் அவர்கள் அடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் வசந்த ராகம். இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1986. இந்த படத்தின் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த் அவர்கள். விஜயகாந்திற்காக விஜய் அவர்கள் குழந்தை வேடத்தில் நடித்த 3 திரைப்படம் இது. மற்ற திரைப்படங்களை விட இந்த படத்தில் அதிகமான காட்சிகளில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஹமான் அவர்கள் நடித்திருத்தார். இந்த திரைப்படத்தில் படத்தின் பெயர் போடுவதற்கு முன்னால் விஜய் அவர்கள் தனது தங்கை புகைப்படத்திற்கு பூ போட்டு மரியாதை செய்வார்.

விஜய் தனது தங்கை புகைப்படத்துடன் 

விஜய் படத்தில் வரும் காட்சி

இத்திரைபடத்தை காண,


நான் சிகப்பு மனிதன்


S.A.சந்திரசேகர் இயக்கிய  திரைப்படங்களில்முக்கியமான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1985. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் அவர்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தான்  ராபின் ஹூட் என்ற கதாபாத்திரம் பிரபலம் ஆனது. மற்ற திரைப்படங்களில் ஹீரோவின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிருப்பார்.

விஜய் தோன்றும் காட்சி

இத்திரைபடத்தை காண,


இளையதளபதி விஜயின் ஆரம்ப வாழ்க்கை

விஜய் அவர்களின் இயற்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் , அவர் பிறந்தது 22 ஜூன் 1974 அன்று மெட்ராஸ் இல். அவரது தந்தையின் பெயர் S.A.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகர். S.A.சந்திரசேகர் அவர்கள் ஒரு இயக்குநர் மற்றும் ஷோபா அவர்கள் பின்னணி பாடகர். இவர்களுக்கு விஜய் மற்றும் ஒரு மகள் இருந்தனர். மகளின் பெயர் வித்யா ஆனால் அவருடைய 2 வயதில் இறந்து விட்டார்.

விஜய் அவரது குழந்தை பருவத்தை சென்னையில் கழித்தார், அவர் பள்ளி படிப்பை Balalok Matriculation Higher Secondary School, Virugambakkamஅதை தொடர்ந்து அவர் Visual Communications படிப்பை Loyola College இல் படித்தார் படித்துக்கொண்டு இருக்கும் போதே நடிப்பின் ஆசையில் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். விஜய் அவர்கள் அவரது தந்தையிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட போது அவர் மறுத்து விட்டார் அன்று விஜய் அவர்கள் வீட்டில் நான் வீட்டை விட்டு போகின்றேன் என்று எழுதிவைத்து விட்டு சென்றுவிட்டார். பிறகு தேடிப்பார்த்த பொழுது அவர் அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் இல் படம் பார்த்து கொண்டு இருந்தார் அதன் பின் விஜய் அவர்கள் தனது தந்தையிடம் அண்ணாமலை படத்தில் வரும் டயலாக் பேசி சம்மந்தம் வாங்கினார்.

விஜய் அவர்கள் சங்கீதா என்பவரை 25 ஆகஸ்ட் 1999 அன்று திருமணம் செய்தார் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும்  மகள் இருக்கின்றனர். மகனின் பெயர் சஞ்சய் மற்றும் அவர் வேட்டைக்காரன் படத்தில் முதல் பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மகளின் பெயர் திவ்யா அவர் தெறி படத்தில் இறுதி காட்சி யில் நடித்துஉள்ளர்.


தாய் தந்தை உடன் விஜய் 
மனைவியுடன் விஜய் 
மகனுடன் வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய் 
மகளுடன் தெறி திரைப்படத்தில் விஜய் 




Wednesday, 13 September 2017

குடும்பம்

விஜய் அவர்கள் அடுத்து குழந்தை  நட்சத்திரமாக நடித்த திரைப்படம் குடும்பம். இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1984. இந்த திரைப்படத்தை இயக்கியவரும்  விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் அவர்கள் தான்.  இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த் அவர்கள். இந்த திரைப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தென்னக ஜேம்ஸ் பாண்ட் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் அவர்கள்.


விஜய் அவர்கள் பெயர் வரும் போது


இத்திரைபடத்தை காண,


வெற்றி


விஜய் அவர்கள் இந்த திரைபடம் மூலமாக தான் குழந்தை  நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1984. இந்த திரைப்படத்தை இயக்கியவர் விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் ஆவார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த் அவர்கள். S.A.சந்திரசேகர் அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த படத்திற்கு வெற்றி என்று பெயர் வைத்தார் என்பது இன்று உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் ஆம் நம் தளபதி வெற்றி பெற போகிறார் என்பதை தனது ஆரம்ப திரைபடத்திலே  சொல்லிவிட்டார்.


படத்தில் விஜய் வரும் ஆரம்ப காட்சி 


இத்திரைபடத்தை காண, 


இளையதளபதி விஜய் படத்தின் பெயர்கள்

விஜய் அவர்கள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதனால் இங்கு அவர் நடித்த அனைத்து படத்தின் பெயர்களை நான் தொகுத்து உள்ளேன்.

இளையதளபதி விஜய் படத்தின் பெயர்கள்,


  1. வெற்றி
  2. குடும்பம்
  3. நான் சிகப்பு மனிதன் 
  4. வசந்த ராகம்
  5. சட்டம் ஒரு விளையாட்டு 
  6. இது எங்கள் நீதி 
மேல உள்ள படங்களில் விஜய் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் .  இதில் நான் சிகப்பு மனிதன் (ரஜினிகாந்த்) மற்றும் இது எங்கள் நீதி (ராம்கி) தவிர மற்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த்.
  1. நாளைய தீர்ப்பு 
  2. செந்தூரப்பாண்டி 
  3. ரசிகன் 
  4. தேவா 
  5. ராஜாவின் பார்வையிலே 
  6. விஷ்ணு 
  7. சந்திரலேகா 
  8. கோயம்புத்தூர் மாப்பிள்ளை 
  9. பூவே உனக்காக 
  10. வசந்த வாசல் 
  11. மாண்புமிகு மாணவன் 
  12. செல்வா 
  13. காலமெல்லாம் காத்திருப்பேன் 
  14. லவ் டுடே 
  15. ஒன்ஸ் மோர் 
  16. நேருக்கு நேர் 
  17. காதலுக்கு மரியாதை 
  18. நினைத்தேன் வந்தாய் 
  19. ப்ரியமுடன் 
  20. நிலாவே வா 
  21. துள்ளாத மனமும் துள்ளும் 
  22. என்றென்றும் காதல் 
  23. நெஞ்சினிலே 
  24. மின்சார கண்ணா 
  25. கண்ணுக்குள் நிலவு 
  26. குஷி 
  27. ப்ரியமானவளே 
  28. ப்ரண்ட்ஸ்
  29. பத்ரி 
  30. ஷாஜஹான் 
  31. தமிழன் 
  32. யூத் 
  33. பகவதி 
  34. வசீகரா 
  35. புதிய கீதை 
  36. திருமலை 
  37. உதயா 
  38. கில்லி 
  39. மதுர
  40. திருப்பாச்சி 
  41. சுக்ரன் 
  42. சச்சின் 
  43. சிவகாசி 
  44. ஆதி 
  45. போக்கிரி 
  46. அழகிய தமிழ் மகன் 
  47. குருவி 
  48. பந்தயம் 
  49. வில்லு 
  50. வேட்டைக்காரன் 
  51. சுறா 
  52. காவலன் 
  53. வேலாயுதம் 
  54. நண்பன் 
  55. ரவுடி ரத்தோர் 
  56. துப்பாக்கி 
  57. தலைவா 
  58. ஜில்லா 
  59. கத்தி 
  60. புலி 
  61. தெறி 
  62. பைரவா 
  63. மெர்சல் 

விஜய் 2 படங்களில் நட்புக்காக (Guest appearance) நடித்து உள்ளார்.

இளையதளபதி விஜய்

அன்புக்கும் பண்புக்கும் பேர் போன எனது இளையதளபதி விஜய் ரசிகர்களே !

இந்த இணையத்தளம் மூலமாக நான் உங்களுக்கு இளையதளபதி விஜய் நடித்த படங்களில் உள்ள பாடல்கள் மற்றும் அந்த படத்தின் பற்றிய தகவல்கள் அளிக்க போகின்றேன் .

இப்படிக்கு உங்கள் நண்பன்
சக்திவேல்